Friday, September 7, 2018

Mazhai Kuruvi Song Lyrics in Tamil from Chekka Chivantha Vaanam Movie

Mazhai Kuruvi Song Lyrics in Tamil from Chekka Chivantha Vaanam Movie



நீல மழைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல்


வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்


கானம்உறைந்துபடும்
மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்



சிட்டு குருவி ஒன்று
ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல்
 என்னை வா வா என்றது


கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது


கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது


ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்கா நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்


கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது


ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ
யார் வரவோ


நீ கண்தொட்டு
கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ இல்லை பரிவோ


நீல மழைச்சாரல்
நநந நநநநா


அலகை அசைந்தபடி பறந்து
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே
உயரே பறந்ததுவே


கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது


கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது


முகிலன்னம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட


வானவெளி மண்ணை நழுவி
விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து
தொலைந்ததென்ன


சிட்டு சிறு குருவி
பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்


விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர்படுமோ துயர்படுமோ
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வழித்திடுமோ வழித்திடுமோ


காற்றில் அந்நேரம்
கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு
குருவி கும்மியடித்தது கான்


சொட்டும் மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது கான் அழுதது கான்


காற்றில் அந்நேரம்
கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு
குருவி கும்மியடித்தது கான்


சொட்டும் மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது கான் அழுதது கான்

No comments:

Post a Comment