Wednesday, June 27, 2018

Kolamavu Kokila Movie Song Lyrics - Ethuvaraiyo Song



எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ

விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர் மறையாதோ

மறுபடி நிலா பொழியாதோ
மறுபடி நிலா பொழியாதோ
நிறையாதோ

நிழல் தரும் கணா விரியாதோ
நிழல் தரும் கணா தெரியாதோ
விரியாதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

பாரம் வந்து பாரம் வந்து சேர
யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்

வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்

விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
உர நகராதோ
அடைபடும் புறா நகராதோ உயராதோ

காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு

ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும் வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு


தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு